உன் தைல
விரல்களுக்கு
ஏங்குகின்றன
என் தலைவலிகள் ...
பிள்ளைகளை நம்பாமல்
தனக்குத்தானே கொள்ளி ,
உதட்டு இடுக்கில் புகை ...!
பற்றிக்கொள்ள
படைக்கப்பட்டவையாமே
விரல்கள் ...!
வெறுங்கை என்பது
மூடத்தனம்
விரல்கள் அனைத்தும்
மூலதனம்...
நான் வரங்களால்
வாழ்வேனென்று
சபிக்கப்பட்டவன்...
உன்னால் முடியும் என்று ஓடு..
உன்னால் அது முடியும் என்று ஓடு..
நீ நினைத்தது முடியும் வரை ஓடு ...